நிஃப்டி காலை 11,135க்கு வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10967க்கு நிறைவடைந்திருக்கிறது. அதே போல் சென்செக்ஸ் காலை 36651 புள்ளிகளூக்கு வர்த்தகமாகத் தொடங்கி, வர்த்தக நேர முடிவில் 36305க்கு நிறைவடைந்திருக்கிறது.
இந்த வாரத் தொடக்கத்திலேயே நிஃப்டி இறக்கத்தில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. கடந்த வார வர்த்தக நாட்களின் இறக்கம் இன்றும் வர்த்தகத்தில் எதிரொலித்து முதலீட்டாளர்களின் நம்பிக்கைக் கோடான 11,000 புள்ளிகளைத் தாண்டி இறக்கம் கண்டு வர்த்தகம் நிறை வடைந்திருக்கிறது.
கடந்த ஜூலை 19க்குப் பிறகு நிஃபிட் 11000 புள்ளிகளுக்கு கீழ் இறக்கம் காணவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
என்பிஎஃப்டி நிறுவனங்கள் மீதான பிரச்னை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வும் அமெரிக்க சீன வர்த்தகப் போர் போன்ற பல்வேறு காரணங்களும் இந்திய சந்தைகளுக்கு எதிராக இருப்பதால், நிஃப்டி இந்த இறக்கம் கண்டிருப்பதாக அனலிஸ்டுகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
நிஃப்டி தன்னுடைய நூறு நாள் மூழிங் ஆவரேஜ் புள்ளிகளை விட இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிஃப்டி தன் அதிகபட்ச புள்ளிகளான 11760-ல் இருந்து 793 புள்ளிகள் சர்நிது (6.7%)10967-ல் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.
எனவே இனி வரும் காலங்களில் சந்தை கன்சாலிடேட் ஆகி வர்த்தகமாகவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. வங்கி நிஃப்டி தொடர்ந்து இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருவதையும் கவனித்தால் சந்தை இனி மேலும் சரியும் என்றே தோன்றுகிறது.