சென்செக்ஸ், நிப்டி என இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த ஒரு வாரமாக இருந்து வந்த சரிவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது 368 புள்ளிகள் உயர்ந்து 34,563.30 புள்ளிகளாகச் சென்செக்ஸ் வர்த்தகம் செய்யப்பட்டது. நிப்டியும் 10,500 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
காலை 11:15 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 26.64 புள்ளிகள் என 0.08 சதவீதம் உயர்ந்து 34,224 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 19 புள்ளிகள் என 0.18 சதவீதம் உயர்ந்து 10,517.25 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று பங்கு சந்தை நேர முடிவில் மெட்டல் துறை பங்குகள் 2 சதவீதத்திற்கும் கூடுதலாக லாபம் அளித்து இருந்தன.
ஓஎஞிசி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, டாக்ட்டர் ரெட்டிஸ், ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் அளித்து வருகின்றன. அதே நேரம் எண்டிபிசி, பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.