அமெரிக்க அரசின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆசிய சந்தையை மட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தையையும் தாக்கியுள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் ஆசிய, ஐரோப்பிய சந்தை அதிகளவிலான பாதிப்பை ஏற்பட்டது.
ஜூன் மாத இறுதியில் தொடர் சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச்சந்தை, கடந்த வாரம் ஜூலை மாதத்திற்கான ஆர்டர்கள் துவங்கிய போது மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு மீண்டது.
இந்நிலையில் ஆசிய சந்தையில் நிலவிய மந்தமான வர்த்தகச் சூழ்நிலையால் இன்று காலையில் சென்செக்ஸ் அதிகளவிலான சரிவை உண்டாக்கியது.
இந்தச் சரிவு மதியம் ஐரோப்பிய சந்தை வர்த்தகம் துவங்கிய பின்பும் தொடர்ந்தாலும், 300 புள்ளிகள் சரிவில் இருந்து 150 புள்ளிகளாகக் குறைந்தது. இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 159.07 புள்ளிகள் சரிந்து 35,264.41 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 57 புள்ளிகள் சரிந்து 10,657.30 புள்ளிகள் எட்டி திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.