மும்பை: இந்திய பங்கு சந்தை நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் திங்கட்கிழமையான இன்று புதிய உச்சத்தினை எட்டியுள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை முடிவுகள் சென்ற வாரம் நேர்மறையாக வந்ததே ஆகும்.
இன்றைய நிலவரம்
பங்குச் சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.73 சதவீதம் என 251.12 புள்ளிகள் உயர்ந்து 34,843.51 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 0.56 சதவீதம் என 60.30 புள்ளிகள் உயர்ந்து 10,741.55 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் வங்கித் துறை பங்குகள் 1.25 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் துறை 1.13 சதவீதமும், பவர் துறை பங்குகள் 0.29 சதவீதமும், மெட்டல் துறை பங்குகள் 0.22 சதவீதமும் லாபம் அளித்துள்ளன. மறுபக்கம் ஆட்டோ துறை பங்குகள் 0.89 சதவீதமும், எண்ணை மற்றும் எரிவாயு துறை பங்குகள் 0.7 சதவீதமும், இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் பங்குகள் 0.65 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
ஹெச்டிஎப்சி (+ 6.17%), ஐசிஐசிஐ வங்கி (+ 3.73%), டாடா ஸ்டீல் (+ 1.58%), ஹெச்.டி.எஃப்.சி வங்கி (+ 1.47%) மற்றும் கொடக் பாங்க் (+ 1.39%)
நட்டம் அளித்த பங்குகள்
ஓஎன்ஜிசி (-1.85%), ஹீரோ மோட்டோகார்ப் (-1.57%), இன்டஸ் இன்ட் வங்கி (-1.41%), ஆம் வங்கி (-1.38%) மற்றும் சன் பார்மா (-1.34%)