வங்கி மற்றும் மெட்டல் துறை பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டதால் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளன. சர்வதேச சந்தையும் நேர்மறையாக உள்ளது. வெள்ளிக்கிழமை சந்தை முடியும் போது சரிவுடன் முடிவடைந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை உயர்வைச் சந்தித்துள்ளது.
சந்தை நிலவரம்
பங்கு சந்தை முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 442.31 புள்ளிகள் என 1.16 சதவீதம் உயர்ந்து 38,694.11 புள்ளியாகவும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 134.85 புள்ளிகள் என 1.17 சதவீதம் உயர்ந்து 11,691.95 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வரியான நிலவரம்
வங்கி, ஆட்டோ, எப்எம்சிஜி, ஐடி, மீடியா, மெட்டல், பார்மா, பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கி துறை, ரியாலிட்டி என நிப்டியினை அனைத்துத் துறைகளும் உயர்வுடன் முடிந்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
பார்தி ஏர்டெல், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், யெஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
சன் பார்மா, எல்ஐசி ஹவுசிங் பினான்ஸ், ரிலையன்ஸ் நேவல் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்துள்ளன.