மும்பை: அமெரிக்காவில் டிரம்ப்பின் எதிரொலி காரணமாக வர்த்தகத்தின் முதல் நாளான இன்று காலை சரிவுடன் துவங்கிய பங்கு வர்த்தகம் சரிவுடனே, முடிந்தும் போனது.
இன்று மாலை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 32.90 புள்ளிகள் சரிந்து 27,849.56 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 8.50 புள்ளிகள் குறைந்து 8,632.75 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
தொலைத்தொடர்பு துறையில் வொடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி 25 சதவீதம் ஐடியாவின் பங்குகள் விலை உயர்ந்தது.
இன்று விலை உயர்ந்த டாப் ஐந்து நிறுவனங்கள்
பார்தி ஏர்டெல் (+7.48%), ரிலையன்ஸ் (+1.85%), சன் பார்மா (+0.81%), ஏசியன் பெயிண்ட்ஸ் (+0.71%) மற்றும் இன்ஃபோசிஸ் (+0.66%).
இன்று சரிவை சந்தித்த டாப் ஐந்து நிறுவனங்கள்
டாடா மோடார்ஸ் (-2.18%), டாடா ஸ்டீல் (-1.56%), ஓஎன்ஜிசி (-1.42%), எஸ்பிஐ (-1.31%) மற்றும் ஹீரோ மோடார் கார்ப் (-1.11%).