இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதன் கிழமை சந்தை நேர முடிவில் லாபத்துடன் முடிவடைந்து இருந்திருந்தது. சென்செக்ஸ் தொடர்ந்து 5 நாட்களாக உயர்வைச் சந்தித்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் செவ்வாய்க்கிழமை 2014-க்கு பிறகு 3 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 60.19 புள்ளிகள் என 0.18 சதவீதம் உயர்ந்து 33,940.44 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 14.90 புள்ளிகள் என 0.14 சதவீதம் உயர்ந்து 10,417.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலை
இன்றைய பங்கு சந்தை நேர முடிவில் ஐடி, மெட்டல் மற்றும் பார்மா துறை சார்ந்த பங்குகள் உயர்ந்த நிலையில் எண்ணெய் & எரிவாயு மற்றும் வங்கி துறை பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
வேதாந்தா நிறுவன பங்குகள் 4.5 சதவீதம் உயர்ந்த நிலையில், டிசிஎஸ், சன் பார்மா, எய்ச்சர் மோட்டார்ஸ் மற்றும் எச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் 2 முதல் 2.6 சதவீதம் உயர்ந்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாக்ட்ட ரெட்டிஸ் மற்றும் ஐடிசி நிறுவன பங்குகள் அதிக நட்டத்தினை அளித்துள்ளன.
இன்ஃபோசிஸ்
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஜனவரி - மார்ச் காலாண்டிற்கான அறிக்கையினை வெள்ளிக்கிழமை வெளியிட இருக்கிறது.