10 வருட அரசு பத்திரங்களின் வருவாய் சரிவு, ஜிடிபி உயர்வு மற்றும் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்கள் இந்தியா பங்கு சந்தையில் இன்று தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பங்கு சந்தைச் சரிவுடன் முடிவடைந்துள்ளது. தேசிய பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 95.12 புள்ளிகள் என 0.27 புள்ளிகள் சரிந்து 35,227.26 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 39.95 புள்ளிகள் என 0.37 சதவீதம் சரிந்து 10,696.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலை
மும்பை பங்கு சந்தையினைப் பெருத்தவரையில் மின்சாரம், பயன்பாடுகள், ரியாலிட்டி மற்றும் அடிப்படை பொருட்கள் துறை சார்ந்த பங்குகள் 1 சதவீத சரிவை சந்தித்துள்ளன. அதே நேஅம் ஆட்டோமொபைல், ஆற்றல் மற்றும் டெலிகாம் துறை பங்குகள் 0.67 சதவீதம் உயர்வைப் பெற்றுள்ளது.
லாபம் அளித்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல் மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனப் பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, மகேந்திரா & மகேந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
ரூபாய் மதிப்பு
மூன்றாவது செஷ்னாக அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்று மாலை 6:45 மணி நிலவரத்தின் படி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 ரூபாய் 22 பைசாவாக உள்ளது.