வாரத்தின் முதல் சந்தை நாளான திங்கட்கிழமை துருக்கி நிதி நெருக்கடியால் இந்திய பங்கு சந்தை பெரும் அளவில் சரிந்தது. ஆனால் நேற்று மாலை சில்லறை பண வீக்கம் சரிந்ததாக வெளியான தகவல் மற்றும் இன்று மொத்த விலை குறியீடு மீதான பணவீக்க சரிவு போன்றவை பங்கு சந்தையினை நட்டத்தில் இருந்து மீட்டுள்ளன.
இன்றைய சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 207.10 புள்ளிகள் என 0.55 சதவீதம் உயர்ந்து 37,852.00 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 79.35 புள்ளிகள் என 0.70 சதவீதம் சரிந்து 11,435.10 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
துறை வாரியான நிலவரம்
ஹெல்த்கேர், ரியாலிட்டி, எனர்ஜி, வங்கி மற்றும் நிதி துறை பங்குகள் லாபம் அளித்த நிலையில் தொழில் துறை, டெலிகாம், பவர் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் உள்ளிட்ட துறை பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
சன் பர்மா, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
வேதாந்தா, எண்டிப்சி, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், என்&டி, ஹீரோ மொட்டோ கார்ப் பங்குகள் நட்டம் அளித்துள்ளன.