அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் ஆசிய சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இன்னும் குறையாமல் உள்ளதால், தினமும் மாறுப்பட்ட வர்த்தக சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சீனா அமெரிக்காவில் செய்த முதலீட்டு அளவை 30 சதவீதம் வரையில் குறைத்துள்ளது முதலீட்டு சந்தையில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இன்று காலை முதல் மந்தமாக இருந்த மும்பை பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் சரிவில் முடிந்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 114.94 புள்ளிகள் சரிந்து 35,432.39 புள்ளிகளை அடைந்துள்ளது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 30.95 புள்ளிகள் சரிந்து 10,741.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
மேலும் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை அடைந்தது.
மறுபுறம் மஹிந்திரா, ஓஎம்ஜிசி, பவர்கிரின்ட், எஸ்பிஐ, சன் பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.