மும்பை: பங்கு சந்தை இன்று காலை துவங்கிய உடன் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தினைத் தொட்டது. ஆனால் சந்தை நேர முடிவில் சென்செக்ஸ், நிப்டி என இரண்டுமே சிறிய அளவில் சரிந்தது.
இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியிடப்பட உள்ள நிலையில் பங்குகள் உயர்வுடன் முடிந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தது. அமெரிக்கச் சந்தையில் அதிகரித்துள்ள அச்சுறுத்தலுக்கு எதிராகப் பதிலடித் திட்டங்களைச் சீனா விவரித்துள்ள நிலையில், உலகச் சந்தையில், ஆசிய பங்குச் சந்தைகளில் அமெரிக்காவின் ஆதாயங்கள் காணப்பட்டன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் சரிந்துள்ளது. எனவே இன்றைய பங்கு சந்தை நிலவரத்தினை விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
இன்றைய நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 6.78 புள்ளிகள் என 0.02 சதவீதம் சரிந்து 36,541.63 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4.30 புள்ளிகள் என 0.04 சதவீதம் சரிந்து 11,018.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையில் உள்ள 19 துறைகளில் 15 இன்று சரிந்துள்ளன. டெலிகாம், அடிப்படை பொருட்கள், ரியாலிட்டி மற்றும் தொழிற்சாலைகள் துறை சார்ந்த பங்குகள் 1.98 சதவீதம் வரை சரிந்துள்ளன. அதே நேரம் எனர்ஜி, ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் நுகர்வோர் சாதன பொருட்கள் துறைகள் லாபத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், கோல் இந்தியா, எச்டிஎப்சி பங்குகள் நட்டத்தினை லாபத்தினை அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.