பணவீக்க அறிவிப்பால் மும்பை பங்குச்சந்தை சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவக்கம் முதல் நிலையான வர்த்தகத்தையும் முதலீட்டையும் பெற்று வந்த நிலையில் ஐரோப்பிய சந்தை துவங்கிய பின்பும், மே மாதத்திற்கான பணவீக்கம் தரவுகள் வெளிவரும் காரணத்தால், வர்த்தக முடிவில் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடியும் நேரத்தில் மளமளவெனச் சரிந்தது.

பணவீக்க அறிவிப்பால் மும்பை பங்குச்சந்தை சரிவு..!

திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 39.80 புள்ளிகள் சரிந்து 35,483.47 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 19.30 புள்ளிகள் சரிந்து 10,786.95 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று பார்தி ஏர்டெல், சன் பார்மா, டாக்டர் ரெட்டி, மாருதி சுசூகி, இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.

மேலும் டாடா ஸ்டீல், பவர் கிரிட், கோல் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex, Nifty End With Small Gains

Sensex, Nifty End With Small Gains
Story first published: Monday, June 11, 2018, 16:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X