பங்கு சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 103.03 புள்ளிகள் என 0.29 சதவீதம் உயர்ந்து 35,319.35 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. அதே நேர தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 23.90 புள்ளிகள் என 0.22 சதவீதம் உயர்ந்து 10,741.70 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
ஐடி பங்குகள் லாபம் அளித்த நிலையில் டிசிஎஸ் சரிவில் இருந்து மீண்டுள்ளது. அதே நேரம் பார்மா, மின்சாரம் மற்றும் பொதுத் துறை வங்கிகள் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்குகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிந்துள்ளன. இன்று காலை சரிந்து காணப்பட்ட இந்தியன் ஆயில் நிறுவனப் பங்குகள் பங்கு சந்தை முடியும் தருவாயில் 0.3 சதவீதம் உயர்வைச் சந்தித்து இருந்தது.
டாடா குழுமத்தில் டாடா மோட்டார்ஸ், டைட்டன், டாடா ஸ்டீல் பங்குகள் 1 முதல் 3 சதவீதம் வரை லாபம் அளித்து இருந்தன. உள்நாட்டு முதலீட்டாளர்கள் 923 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மே 8-ம் தேதி வாங்கியிருந்தனர்.