கச்சா எண்ணெய் விலை உயவு, ரீடெயில் முதலீட்டாளர்கள் லாபத்திற்காகப் பங்குகளை விற்றது மற்றும் பார்மா துறையின் மோசமான நிலை போன்றவற்றால் பங்குச்சந்தை ஒரே நாளில் 360 புள்ளிகள் சரிந்தது.
நேற்று பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 33,865.95 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தினைத் தொட்டது. அதற்கு முன்பு 33,731.19 புள்ளிகள் உயர்ந்ததே அதிகபட்சமாக இருந்தது.
துறை சார்ந்த நிலை
ஹெல்த்கேர் பங்குகள் 3.51 சதவீதம் சரிந்தும், ரியாலிட்டி துறை பங்குகள் 2.24 சதவீதம் சரிந்தும், நுகர்வோர் சாதன பங்குகள் 2.03 சதவீதமும், பொதுத் துறை பங்குகள் 1.92 சதவீதமும் சரிந்தது. ஐடி மற்றும் டேக் துறைகள் லாபம் அளித்தன.
இன்றைய நிலை
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 360.43 புள்ளிகள் என 360.43 புள்ளிகள் சரிந்து 33,370.76 ஆகச் சரிந்தது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 101.65 புள்ளிகள் என 0.97 சதவீதம் சரிந்து 10,350.15 புள்ளிகளாக வரித்தகம் ஆனது.
நட்டம் அளித்த பங்குகள்
லுபின் (-16.84%), சிப்லா (-7.18%), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (-3.57%), பார்தி ஏர்டெல் (-3.45%), ரிலையன்ஸ் (-2.98%)
லாபம் அளித்த பங்குகள்
இன்ஃபோசிஸ் (+ 2.92%), டிசிஎஸ் (+ 1.55%), விப்ரோ (+ 0.87%), கோடக் வங்கி (+ 0.33%) மற்றும் ஐடிசி (+ 0.32%)