சர்வதேச சந்தையில் அமெரிக்கா, இங்கிலாந்து எனச் சந்தையில் நிலவி வரும் மந்தமான சூழல் இந்திய பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. டாலருக்கு எதிரான இந்திய மற்றும் ஆசிய நாணய மதிப்புச் சரிவு போன்றவை சந்தையில் தக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை வெளிநாட்டு முதலீடுகள் 433.21 கோடி ரூபாய் வரை வந்த நிலையில் உள்நாட்டில் 142 கோடி ரூபாய் அளவில் பங்குகள் வாங்கப்பட்டு இருந்தது. எனவே வர இறுதி நாளான வெள்ளிக்கிழமை பங்கு சந்தை நிலவரத்தினை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 84.96 புள்ளிகள் என 0.22 சதவீதம் சரிந்து 38,251.80 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4.30 சதவீதம் என 0.04 சதவீதம் சரிந்து 11,566.60 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையில் எனர்ஜி, எண்ணெய் & எரிவாயு மற்றும் பவர் நிறுவனப் பங்குகள் லாபம் அளித்தன. அதே நேரம் நுகர்வோர் சாதனங்கள், ஐடி, ஃபினான்ஸ் மற்றும் தொழிற்சாலை துறை பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
வேதாந்தா, ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, மஹீந்தரா, டாடா ஸ்டீல் பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
யெஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, சன் பார்மா பங்குகள் நட்டம் அளித்துள்ளன.