இந்திய பங்கு சந்தை வியாழக்கிழமை நட்டத்துடன் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை லாபத்துடன் முடிவடைந்துள்ளது. காலைச் சந்தை துவங்கும் போது மந்தமாகத் துவங்கிய நிலையில் சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரினால் ஆசிய பங்கு சந்தைகள் பிளாட்டாகவே இருந்தன. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டு 69 ஆகச் சரிந்தது.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 83.31 புள்ளிகள் என 0.23 சதவீதம் உயர்ந்து 35,657.86 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 22.90 புள்ளிகள் என 0.21 சதவீதம் உயர்ந்து 10,722.65 புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆனது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையில் ஆட்டோமொபைல், ரிலயாலிட்டி, கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் லாபம் அளித்துள்ள நிலையில், ஹெல்த்கேர், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எப்எம்சிஜி துறை சார்ந்த பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
ஹீரோ மோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், மகேந்திரா & மகேந்திரா மற்றும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் இன்று லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
சன் பார்மா, எண்டிபிசி, எச்டிஎப்சி, விப்ரோ, வேதாந்தா, ஐசிஐசிஐ பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.