இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி இரண்டு வியாழக்கிழமை சந்தை நேர முடிவில் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளனர். ரிசர்வ் வங்கி 50,000 கோடி ரூபாயினை இந்திய அரசுக்கு உபரி அளிக்க முடிவு செய்ததே இன்றை சந்தையின் உயர்வுக்குக் காரணம் ஆகும்.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் அபாயம், நிலையான அமெரிக்கச் சந்தை, சரிவில் ஐரோப்பிய சந்தை, ஆசியா சந்தையின் நேர்மறைக்கு இடையில் இந்திய பங்கு சந்தையின் இன்றைய நிலை என்ன என்று இங்குப் பார்ப்போம்.
சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 136.81 புள்ளிகள் என 0.36 சதவீதம் உயர்ந்து 38,024.37 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 20.70 புள்ளிகள் என 0.18 சதவீதம் உயர்ந்து 11,470.70 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ரியாலிட்டி, வங்கி, மெட்டல், மின்சாரம், நிதி துறை பங்குகள் லாபம் அளித்த நிலையில் டெலிகாம், நுகர்வோர் சாதனங்கள், ஹெல்த்கேர் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் உள்ளிட்ட துறைகள் நட்டம் அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய நிறுவனங்கள்
ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, எஸ்பிஐ, பவர் கிரிட், எண்டிபிசி பங்குகள் லாபம் அளித்தள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
பார்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி, கோடாக் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, எல்&டி மற்ரும் எச்டிஎப்சி வங்கி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.