முதல் முறையாக ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது டாடா சன்ஸ்.. மாஸ் காட்டும் சந்திரசேகரன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தமிழரான என்.சந்திரசேகரன் தலைமையில் இயங்கி வருகிறது. டாடா குழுமத்தில் இயங்கி வரும் பல நிறுவனங்களில் இவர் எடுத்து முடிவுகள் மற்றும் மாற்றங்கள் மூலம் டாடா குழுமம் தொடர் வளர்ச்சியை அடைந்து வருகிறது.

இந்நிலையில் டாடா சன்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா குழும நிறுவனங்களின் பங்குகளின் மொத்த மதிப்பு முதல் முறையாக 10 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தாண்டியுள்ளது.

மாத சம்பளக்காரர்கள் கண்ணீர்.. 34 லட்சம் பேர் வேலையை இழந்தனர்..!மாத சம்பளக்காரர்கள் கண்ணீர்.. 34 லட்சம் பேர் வேலையை இழந்தனர்..!

 டாடா சன்ஸ்

டாடா சன்ஸ்

டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களில் சுமார் 14 நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நேரடியாகப் பங்குகளை வைத்துள்ளது.

 10 டிரில்லியன் ரூபாய்

10 டிரில்லியன் ரூபாய்

அப்படி டாடா சன்ஸ் வைத்துள்ள 14 பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அதாவது 10 டிரில்லியன் அளவீட்டை முதல் முறையாகத் தாண்டியுள்ளது.

 டாடா சன்ஸ் போர்ட்போலியோ

டாடா சன்ஸ் போர்ட்போலியோ

டாடா சன்ஸ் போர்ட்போலியோவில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் பெருமளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர், டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா பவர், டாடா மெடாலிங்க்ஸ், டாடா ஜிவிகே ஹோட்டல்ஸ், ரெய்ல்ஸ் இந்தியா, TRF, டாடா ஸ்டீல் லாங் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கிறது.

 94 சதவீத வளர்ச்சி

94 சதவீத வளர்ச்சி

மேலும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 14 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 17.9 டிரில்லியன் டாலர், இது கடந்த வருடம் மார்ச் மாத முடிவில் வெறும் 9.2 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில் சுமார் 94 சதவீத வளர்ச்சி அடைந்து டாடா சன்ஸ் பங்கு இருப்பின் மதிப்பை அதிகரித்துள்ளது.

 14 நிறுவனங்கள்

14 நிறுவனங்கள்

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள 14 நிறுவனங்களில் சுமார் 58,746 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், டாடா பவர் ஆகிய நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.

 பட்டியலிடப்படாத நிறுவனங்கள்

பட்டியலிடப்படாத நிறுவனங்கள்

இதுமட்டும் அல்லாமல் டாடா சன்ஸ் பட்டியலிடப்படாத பல நிறுவனங்களில் அதிகளவிலான பங்குகளை வைத்துள்ளது. குறிப்பாக Ewart Investments மற்றும் Panatone Finvest ஆகிய நிறுவனங்களிலும் பங்குகளை வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Sons stake in 14 listed tata companies crosses Rs 10 trillion Mark for First time

Tata Sons stake in 14 listed tata companies crosses Rs 10 trillion Mark for First time
Story first published: Monday, May 10, 2021, 20:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X