சென்னை: ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரத் தேக்கம் காரணமாக இந்திய சாப்ட்வேர் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது பெருமளவில் குறைந்து வருகிறது.
மேலும் புராஜக்ட்கள் இல்லாததால் சில சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியில் உள்ள என்ஜினியர்களுக்கும் போதிய வேலைகள் இல்லை. கடந்த 6 மாதமாகவே இந்த நிலைமை தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக டெலிகாம், நிதித்துறை தொடர்பான சாப்ட்வேர் புராஜக்டுகள் சமீப காலமாக பெருமளவில் குறைந்துவிட்டன. இதனால் பெஞ்சில் இருக்கும் என்ஜினியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் நிறுவனத்தின் லாபத்தில் சரிவு ஏற்படலாம் என இன்போசிஸ் தனது ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது.
இந் நிலையில் டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் ஆகியவற்றில் புதிதாக பணிக்கு எடுக்கப்பட்ட ஊழியர்கள் இந்த மாதத்தில் இருந்து பணியில் சேரவுள்ளதால், பெஞ்சில் இருப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.