தக்காளி விலை கிலோ 2 ரூபாய்: மக்கள் மகிழ்ச்சி, விவசாயிகள் கவலை

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளி விலை கிலோ 2 ரூபாய்: மக்கள் மகிழ்ச்சி, விவசாயிகள் கவலை
காய்கறி சந்தைகளில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், தக்காளி விலை சரிந்துள்ளது. கிலோ 2 ரூபாய் விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விளையும் தக்காளி, ஒட்டன்சத்திரம், தேவாரம், சின்னமனூர் சந்தைகள் மூலம் திருச்சி, திருநெல்வேலி, கேரளா, சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த வாரம், ஒரு பெட்டி தக்காளி (15 கிலோ), 350 ரூபாய்க்கு, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது; இந்த வாரம் வெகுவாக சரிவடைந்துள்ளது.

திருப்பூர் காய்கறி சந்தையில் ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக, 40 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லறை விலையில் ஒரு கிலோ- 5 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல், தேனி உட்பட மாவட்டங்களில் விளைச்சலும் அதிகம். இதனால் விலை சரிந்துள்ளது, என்று தக்காளி கமிஷன் கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தக்காளி விலை குறைந்துள்ளதால் நுகர்வோர்கள் கிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட, 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு பெட்டி தக்காளி, 50 ரூபாய்க்கும் குறைவாக விற்பதால், பறிப்பு கூலி கொடுக்க கூட கட்டுபடியாகவில்லை என்று வியாபரிகள் கூறியுள்ளனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tomato prices fall in TN Farmers disappointed | தக்காளி விலை கிலோ 2 ரூபாய்: மக்கள் மகிழ்ச்சி, விவசாயிகள் கவலை

According to the market sources, a kg of tomato is sold at Rs.2 to Rs.4 in the retail market as against the average price of Rs.5 a kg.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X