விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு
நெல்லை: விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரி்த்துள்ளது.

இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் விநாயகர் சிலைக்கு பூ மாலை அணிவித்து, வீட்டை பூவால் அலங்கரிப்பர். இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் என்று சாலையோர பூக்கடைகள் முளைத்தன.

தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று ரூ.200க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப் பூ இன்று காலை ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று பிச்சிப்பூவும் ரூ.175ல் இருந்து ரூ.350க உயர்ந்துள்ளது.

அதே சமயம் கோழிக்கொண்டை, கேந்தி, செவ்வரளி உள்ளிட்ட பூக்களுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கேந்திப் பூ கிலோ ரூ.25 வரை விற்கப்பட்டது. வட மாவட்டங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பூக்களை அனுப்பி கேரளாவுக்கு அனுப்பும விவசாயிகளும், வியாபாரிகளும் போதிய விலை இல்லாததால் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vinayagar chaturthi: Flowers price soar | விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

Flower prices have increased in Tamil Nadu ahead of Vinayagar chaturthi festival.
Story first published: Wednesday, September 19, 2012, 11:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X