இது குறித்து சென்னை வருமான வரித்துறை தலைமை ஆணையாளர் அலுவலக மக்கள்தொடர்பு அதிகாரி கே.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ரீபண்டு தொகை வழங்குவதற்காக வங்கி கணக்கு எண் விவரம் கேட்டு, வருமான வரி செலுத்திய பலருக்கு [email protected] என்பது உள்ளிட்ட பல்வேறு இ-மெயில் முகவரிகள் மூலமாக இ-மெயில் வந்து கொண்டிருப்பது குறித்து வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை ரீபண்டு வழங்க வங்கி கணக்கு எண் விவரம் கேட்டு யாருக்கும் இ-மெயில் மூலம் தகவல் கேட்கவில்லை என்று வரி செலுத்துனர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற போலி இ-மெயில்கள் குறித்து கவனமாக செயல்படுமாறும், அது போன்ற இ-மெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.
ரீபண்டு தொடர்பான சந்தேகம் இருந்தாலோ அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ அது குறித்து சம்பந்தப்பட்ட வருமான வரி மதிப்பீட்டு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.