ரயில் முன்பதிவு மற்றும் ரத்து கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் - அமைச்சர் தகவல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயில் முன்பதிவு மற்றும் ரத்து கட்டணம்  மேலும் அதிகரிக்கலாம் - அமைச்சர் தகவல்
டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கான கட்டணங்கள் மேலும் உயர வாய்ப்பிருப்பதாக ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார்.

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் பன்சால் 'தற்போதைய காலத்துக்கு ஏற்ப ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்த வேண்டியுள்ளது. அதே போல், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த சேவை அளிக்க ஏராளமாக நிதி தேவைப்படுகிறது. எனவே, ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களில் முதலீடு செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

 

ரூ. 2 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பெயர்கள் அந்த நிலையங்களுக்கு சூட்டப்படும்.ரயில் கட்டணங்கள் 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால், நிதி பற்றாக்குறை அதிகரித்து விட்டது. இதனால், குறைந்த அளவில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இதில் சாதாரண வகுப்பு பயணிகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை.ரயில் டிக்கெட்களுக்கு 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படுகிறது.

 

ஏஜென்டுகள் இதை பயன்படுத்தி முதல் நாளே டிக்கெட்களை எடுத்து, மீதி 119 நாட்களிலும் விற்கிறார்கள். விற்க முடியாத டிக்கெட்டுகளை கடைசி நாளில் ரத்து செய்து விடுகிறார்கள். இதை தடுக்க முன்பதிவு, ரத்து கட்டணங்களை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் உண்மையிலேயே பயணம் செய்ய விரு ம்புபவர்களுக்கு டிக்கெட் கிடைக்கும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தவிர, மும்பை-காரைக்கால் உள்பட மேலும் 19 புதிய ரயில்கள் மற்றும் சேவை நீட்டிப் புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்' என தெரிவித்தார்.

வெளிநடப்பு:

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டுமே ரயில்வே பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி, அமைச்சர் பன்சால் பதிலுரையின் போது, அதிமுக, பாஜ, சிவசேனா, திரிணாமுல், பிஜேடி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tarin reservation and cancellation charges likely to be increased - minister Pansal | ரயில் முன்பதிவு மற்றும் ரத்து கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் - அமைச்சர் தகவல்

The Railways minister Pansal said that,"To avoid train tickets sold illigally by the agents, the reservation and cancellation charge should be increased step by step'. This statement of Pansal was objected by the opposition parties and condemning this they walked out from the session.
Story first published: Thursday, March 14, 2013, 13:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X