2016-ல் நிதிப் பற்றாக்குறை 2.71 சதவீதமாகக் குறையும்- தமிழக அரசு நம்பிக்கை

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016ல் நிதிப் பற்றாக்குறை 2.71% ஆக குறையும்- ஓ.பி. நம்பிக்கை
சென்னை: தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் நடப்பாண்டில் 2.84% ஆக இருக்கும் என்றும் அடுத்த அடுத்த ஆண்டுகளில் இது 2.78% ஆகவும், 2.71% ஆகவும் குறையும் என்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம் , 2013-2014 ஆம் ஆண்டிற்கான வருவாய் கணக்கு செலவுகள் ரூ.1,17,915.81 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடு 2012-2013 ஐக் காட்டிலும் 15 சதவீதம் கூடுதலாகும். அதிக அளவிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியது, நடைமுறையிலுள்ள திட்டங்களுக்கான உதவித் தொகைகளை உயர்த்தியது மற்றும், காலிப் பணியிடங்களைத் திட்டமிட்டு நிரப்பியது போன்றவையே இந்த உயர்வுக்குக் காரணம்.

சம்பளத்துக்கான ஒதுக்கீடு ரூ.34,569.28 கோடி

2013-2014 ல் சம்பளம் குறித்த ஒதுக்கீடு ரூ.34,569.28 கோடி மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவினத்திற்கான ஒதுக்கீடு ரூ.15,117.82 கோடியாகும். இவ்வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவுகள் மொத்த வருவாய் செலவுகளில் 42 சதவீதமாகும். ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி நிலுவைத் தொகை முழுவதுமாக வழங்கப்பட்டிருப்பினும், காலமுறை அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவதால் ஏற்படும் கூடுதல் செலவு ஆகியவை மேற்கூறிய செலவினம் அதிகரிக்கக் காரணங்களாகும்.

மானியம், உதவித் தொகைகள் ரூ45,176 கோடி

2014-2015 மற்றும், 2015-2016 ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.45,176.06 கோடியாகும். இலவச அரிசி வழங்குவதாலும், பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியத் தொகைகளின் உயர்வாலும், பல்வேறு திருமண உதவித் திட்டங்கள் மற்றும் மகப்பேறு உதவித் திட்டங்களின் உதவித் தொகை உயர்வாலும், கறவை பசுக்கள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்குவதாலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்வுக்கேற்ப உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகமாக நிதி பகிர்ந்தளிக்கப்படுவதாலும், தமிழக மின்சார வாரியத்திற்கு கூடுதல் உதவித் தொகை வழங்குவதாலும் அதிக ஒதுக்கீடு அவசியமாகிறது.

இலவசங்களால் 15% செலவு அதிகரிப்பு

2012-2013 திருத்த மதிப்பீட்டைக் காட்டிலும் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு 2013-2014 ல் ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளன.

இந்த உயர்வு, இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் போன்ற திட்டங்களால் ஏற்பட்டுள்ளது. 2014-2015, 2015-2016 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

2013-2014 ஆம் ஆண்டில் வட்டி செலுத்துதல் ரூ.13,584 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டிற்கான வட்டிச் செலவு வரவில் 10.99 சதவீதமாகும். இவ்விகிதம் 2014-2015 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளில் முறையே 10.99 சதவீதம் மற்றும் 11.09 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் மூலதனம் குறித்த செலவுகளை பெருமளவு உயர்த்த இம்மாநிலம் கருதியுள்ளது. அதன் விளைவாக, மூலதனம் குறித்த செலவுகளுக்கு திருத்த மதிப்பீடு 2012-2013 ல் ஒதுக்கீடு செடீநுயப்பட்ட ரூ.19,165.42 கோடியைவிட அதிகத் தொகை அளிக்கப்பட்டு, வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு 2013-2014 ல் ரூ.22,505.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 17.42 சதவீத உயர்வைக் காட்டுகிறது. இது 2014-2015 ஆம் ஆண்டில் 14 சதவீதம் மற்றும் 2015-2016 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக வளரும் என கணிக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை ரூ22,938.57 கோடி இருக்கும்

2013-2014 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் கடன் மற்றும் முன்பணங்கள் உள்ளடக்கிய மூலதனம் குறித்த செலவினத்திற்கு ரூ.23,602.63 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் வருவாய் உபரி ரூ.664.06 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாநிலமானது, 2014-2015 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து வருவாய் உபரியை பராமரிக்கும். 2013-2014 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.22,938.57 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.84 சதவீதமாக இருக்கும். வரும் ஆண்டுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2014-2015 ஆம் ஆண்டில் 2.78 ஆகவும், 2015-2016 ல் 2.71 ஆகவும் இருக்கும்.

2013-2014 ஆம் ஆண்டில் மாநில அரசு வாங்க அனுமதிக்கப்பட்ட கடன் அளவு ரூ.24,263 கோடியாகும். இருப்பினும், அரசு கடன் வாங்குவதைக் குறைக்க உத்தேசித்துள்ளது. மாநில அரசு தொகுநிதியில் நிகர கடன் வாங்குதல் ரூ.21,142.47 கோடியாக மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. 31.03.2014 அன்று வருங்கால வைப்பு நிதி போன்றவை உள்ளிட்ட ஏனைய கடன் ரூ.1,55,129.62 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 19.18 சதவீதமாகும் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TN Govt expects fiscal deficit to GSDP ratio to be at 2.71 in FY16 | 2016ல் நிதிப் பற்றாக்குறை 2.71% ஆக குறையும்- ஓ.பி. நம்பிக்கை

The Government of Tamil Nadu today put forward a medium term fiscal plan for a period between 2013 and 2016, expecting the fiscal deficit to GSDP ratio to be at 2.71 in 2015-16, as compared to the estimated 2.84 for the fiscal year 2013-14.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X