சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15% உயர்த்த திட்டம்: மத்திய அரசு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15% உயர்த்த திட்டம்: மத்திய அரசு
சென்னை: உலகில் சர்க்கரை உற்பத்தியிலும், அதன் பயன்பாட்டிலும் இந்தியா பெரும் பங்கை வகிக்கிறது. இந்திய அரசு சர்க்கிரையின் இறக்குமதி வரியை 10 சதவிதத்தில் இருந்து 15 சதவிதம் உயர்த்த முடிவு செய்து உள்ளது. இதனால் இறக்குமதி அளவை குறைத்து, உள்ளுர் சந்தைகளில் இருக்கும் அதிகபடியான இருப்பை குறைக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

"உணவுத் துறை, வணிகத் துறை மற்றும் விவசாயத் துறையின் முத்தரப்பு கூட்டத்தில், சர்க்கரைக்கு 15 சதவித இறக்குமதி வரியை உயர்த்த ஒப்புக்கொண்டனர்" என பெயர் சொல்ல விரும்பாத அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்

 

"வரி உயர்வை ஒப்புக்கொண்டாலும், முறையான அறிவிப்பை நிதி துறை கூடிய விரைவில் அறிவிக்கும்", என உணவு துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகை 90 பில்லியனாக உயர்ந்தது, மேலும் உள்ளுர் சர்க்கரையின் விலை குறைந்ததால் ஆலைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது

இதனால் இந்திய சர்க்கரை ஆலைகள், பிரேசிலில் இருந்து குறைவான விலையில், அதிகமான சர்க்கரையை இறக்குமதி செய்து வந்தனர். வரி அதிகரிப்பின் முலம் இந்த இறக்குமதியை தடுக்கலாம் என மத்திய அரசு நம்புகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'Govt raises import duty on sugar to 15%'

India, the world's biggest sugar consumer, has decided to raise the import duty on the sweetener to 15 percent from 10 percent currently, to discourage overseas buying amid a drop in local prices due to ample supplies, two government sources said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X