"உணவுத் துறை, வணிகத் துறை மற்றும் விவசாயத் துறையின் முத்தரப்பு கூட்டத்தில், சர்க்கரைக்கு 15 சதவித இறக்குமதி வரியை உயர்த்த ஒப்புக்கொண்டனர்" என பெயர் சொல்ல விரும்பாத அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்
"வரி உயர்வை ஒப்புக்கொண்டாலும், முறையான அறிவிப்பை நிதி துறை கூடிய விரைவில் அறிவிக்கும்", என உணவு துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகை 90 பில்லியனாக உயர்ந்தது, மேலும் உள்ளுர் சர்க்கரையின் விலை குறைந்ததால் ஆலைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது
இதனால் இந்திய சர்க்கரை ஆலைகள், பிரேசிலில் இருந்து குறைவான விலையில், அதிகமான சர்க்கரையை இறக்குமதி செய்து வந்தனர். வரி அதிகரிப்பின் முலம் இந்த இறக்குமதியை தடுக்கலாம் என மத்திய அரசு நம்புகிறது.