வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆதார் எண்ணை வாங்க சொல்லியுள்ளது நிதி அமைச்சகம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை உடனடியாக ஆதார் எண்ணை சமர்ப்பிக்க அணுகுமாறு நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. துரிதமான முறையில் டைரக்ட் பெனிபிட் ட்ரான்ஸ்பர் (DBT) திட்டம் செயல்பட தடையில்லா பண மாற்ற பயன் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யவே நிதி அமைச்சகம் இதனை கேட்டுக்கொண்டுள்ளது.

 

நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "வாடிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய ஆதார் எண்ணை அவர்களின் வங்கி கணக்கோடு இணைக்குமாறு வங்கிகளின் தலைவர்கள் அனைவரையும் அறிவுறுத்த இன்று என் அலுவலக பணியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

DBT திட்டம்

DBT திட்டம்

DBT திட்டம் தற்போதைய நடைமுறையை பெரிதளவில் மாற்றும் என்று கூறும் அவர், "ஆதார் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைக்கும் வேலை 80% முடிவடையும், அது சாதிக்கக் கூடிய ஒரு அளவீடு. மேலும் இது தொடர்பாக இன்று வெளியேறும் எங்கள் குழுவின் முயற்சியால் இதர மாவட்டங்களிலும் இந்த பனி வேகமாக முடிவடையும்". என்றும் கூறியுள்ளார்.

சிலிண்டர் மானியம்

சிலிண்டர் மானியம்

சிலிண்டர் (LPG) மானியம் மாறுதலை பற்றி அவர் கூறுகையில், "இது சுலபமாக மாற்றக் கூடிய மானியம் தான். எண்ணெய் நிறுவனங்களுக்கு பணம் கட்டக் கூடியது ஒருவர் மட்டுமே; அது இந்திய அரசாங்கம் மட்டுமே." சிலிண்டர் மானியம் பற்றி அவர் மேலும் கூறுகையில், இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் அது திரும்பி பெற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

DBT திட்டத்தின் லட்சியம்
 

DBT திட்டத்தின் லட்சியம்

DBT திட்டத்தின் லட்சியமே பணத்தை வங்கி மூலமாக பரிமாற்றம் செய்வது தான். அதற்கு வங்கியில் தற்போது இருக்கும் முறையையும் சேர்த்து ஆதார் பெரிய தளமாக துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

உணவு மற்றும் உரத்திற்கான மானியம்

உணவு மற்றும் உரத்திற்கான மானியம்

DBT திட்டம் ஜூலை 1 முதல் 121 மாவட்டங்களில் செயல்பட தொடங்கியுள்ளது. உணவு மற்றும் உரத்திற்கான மானியம் மாறுதலுக்கும் கூட DBT செயல்பாடு விரிவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM asks banks to seek Aadhar nos from customers

Finance Ministry asked the banks to approach the customers for submission of Aadhaar number to ensure seamless transfer of cash benefit in order to expedite implementation of Direct Benefit Transfer scheme.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X