ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இடையே நடந்த கூட்டத்தில் பேசிய அனில் அம்பானி, "முன்மொழியப்பட்ட வங்கி, நீண்ட கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை கொண்டதாக உள்ளதாகவும், இவ்வங்கி இலாபகரமாக செயல்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
"வங்கி உரிமம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம். முதலில் கட்டமாக வங்கி உரிமம் பெறுபவர்கள் மத்தியில் நாங்களும் ஒருவராக இருப்போம்," என்று ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன தலைவர் அனில் அம்பானி கூறினார்.
ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பல்வேறு துணை நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடுவது குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த அனில் அம்பானி, ரிலையன்ஸ் கேபிடல் தொடர்ந்து பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கும், திட்டமிடப்பட்டுள்ள வங்கி தவிர மற்ற துணை நிறுவனங்களை பட்டியலிட தற்போது எந்த ஒரு திட்டமும் இல்லை என தெரிவித்தார்.