"இது போன்ற மோசடியான திட்டங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசாங்கம் மற்றும் ரெகுலேட்டர்களின் மிக முக்கிய பொறுப்பாகும்." என்று, இன்னும் ஒரு வார காலத்தில் பதவி விலக உள்ள திரு சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
மீடியா தகவல்களின் படி, சுப்பாராவ் இரண்டு பரிணாமங்கள் கொண்ட ஒரு அணுகுமுறையை பரிந்துரைத்துள்ளார்: முதலீட்டாளர்களிடையே இத்தகைய திட்டங்களின் நம்பகமின்மையைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புதல்; மற்றும் பொது மக்களின் சேமிப்புகள் பாரம்பரியமான நிதி அமைப்புக்குச் சென்று சேரும் வண்ணம் நிதி சேர்க்கைகளை பலப்படுத்துதல் ஆகியவையே அவ்விரு பரிணாமங்கள் ஆகும்.
சமீபத்தில், மேற்கு வங்கத்தில் உயர்வான ப்ரொஃபைலைக் கொண்டிருந்த சாரதா குழுமம், ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பெருமளவில் மோசம் செய்து, திவாலாகியுள்ளது.