மும்பை: நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் எஸ்பிஐ வங்கி புதிய திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இத்துறையில் முதலீடு செய்ய நீண்த கால திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான மறுகடன் போன்றவற்றிற்கான நிதியை ஒவ்வொரு ஐந்தான்டிற்கும் திரட்ட முடிவுசெய்துள்ளது என எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டசார்யா கூறியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தியன் ஸ்கூல் ஆப் பாங்கிங் (ISB) ஏற்பாடு செய்திருந்த முதலீட்டுச் சந்தைகள் மாநாட்டில் அவர் பேசும்போது, வளர்ச்சிப்பாதையில் பயணிக்கையில், கட்டமைப்புகளுக்கான நிதியை திரட்ட புதிய யுக்திகள் தேவைப்படுவதாகவும், இப்புதிய திட்ட வழிமுறைகளைக் கொண்டும் 5x25 எனப்படும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகடன் செய்ய உதவும் என தெரிவித்தார்.
கட்டமைப்புகளுக்கான பெரும்பாலான நிதி தற்பொழுது வங்கிகள் மூலமாகவே செய்யப்படுகிறது. அதனால் நீண்ட நாட்களுக்கு வங்கிகள் தங்கள் நிதியை திரும்பப் பெற இயலாது. இதன் பின்னணியில் உள்ள சொத்து நீண்ட நாட்களுக்கானது என்றாலும் கட்டமைப்பு நிறுவனங்கள் பணத்தை குறைந்த காலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. இதனால் கடன் திரும்ப செலுத்துவதில், முன்-இடுதல் (front-loading) எனப்படும் நிலை ஏற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியையும் அறிவித்த காலத்திற்குள் திட்டத்தினையும் பொறுத்தே மறுகடன் பரிசீலித்தல் அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.