2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் 53% மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்!!! ரிப்போர்ட்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் ஏறக்குறைய பாதி பேர் எந்த வேலையை செய்யவும் தகுதியற்றவர்களாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது, இந்தியாவின் கல்வி முறைமாணவர்களுக்கு எந்த வித திறன்களையும் அளிப்பதில்லை என கருத்து நிலவுகிறது. நகைச்சுவை நடிகர் கூறுவது போல "என்னத்த படிச்சு... என்னத்த கிழிக்கபோராங்களோ" என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது இந்த ஆய்வு அறிக்கை.

அஸ்பைரிங் மைன்ட்ஸ் (Aspiring Minds) என்ற வேலைத்திறன் தீர்வு நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் 2013 ஆம் ஆண்டில் தேர்வுற்ற பட்டதாரிகளில் ஏறக்குறைய 47 சதவிகிதம் பேர் ஆங்கில மொழி அறிவு மற்றும் அறிவாற்றல் திறன்கள் உள்ளிட்ட திறமைகளின் அடிப்படையில் எந்த வேலையும் செய்யத் திறனற்றவர்களாக இருப்பது ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலாக வெளிவந்துள்ளது.

தகுதி பெற்றவர்கள்

தகுதி பெற்றவர்கள்

ஆய்வில் பங்கேற்றவர்களில் 2.59 சதவிகிதம் பேர் கணக்குப் பதிவியல் போன்ற செயலாற்றுத் துறைகளிலும், 15.88 சதவிகிதம் பேர் விற்பனை தொடர்பான வேலைகளிலும் மற்றும் 21.37 சதவிகிதம் பேர் பீபிஒ எனப்படும் வர்த்தக நடைமுறைகள் வெளிப்பெரும் துறைகளுக்கும் பொருத்தமானவர்களாக இருப்பதாகவும் அந்த ஆயவரிக்கை தெரிவித்துள்ளது.

இதிலும் பெண்கள் முதல் இடம்!!!

இதிலும் பெண்கள் முதல் இடம்!!!

அதிகமாக பெண்கள் மூன்று வருட பட்டப்படிப்பை மேற்கொள்வதாகவும், வேலைக்கு பொருத்தமானவர்கள் எனும்போது, ஆண்களுக்கு இணையாகவோ அல்லது சற்று அதிகமாகவோ பொருந்துவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

குறைப்பாடுகள்

குறைப்பாடுகள்

மூன்று வருட பட்டப் படிப்புகளில் 100 பெண்களுக்கும் சராசரியாக 109 ஆண்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. வேலை பெறுவதில் குறைந்த ஆங்கில மொழி அறிவு, கணினித் திறன் குறைபாடு மற்றும் அறிந்து கொள்ளும் திறன் ஆகியவை பெரும் தடைகளாக இருக்கிறது.

சிறு நகரங்களின் நிலை!!

சிறு நகரங்களின் நிலை!!

ஆங்கில மொழி அறிவு மற்றும் கணினித் திறன் குறைபாடுகள் சிறிய நகரங்களில் பெரும்பாலும் வேலை வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் சிறிய நகரங்களில் வசிக்கும் அல்லது படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் இந்த கணினி மற்றும் ஆங்கிலத் திறன் குறைபாடுடன் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

தகுதியான மாணவர்கள் மிகவும் குறைவு

தகுதியான மாணவர்கள் மிகவும் குறைவு

பட்டபடிப்பில் தேர்ச்சி பெறுபவர்களில் நிதி மற்றும் கணக்குப் பதிவியல் துறையில் நடைமுறை பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அணுகுமுறைகளை மேற்கொள்பவர்கள் வெறும் 25 சதவிகிதம் மட்டுமே உள்ளனர் எனவும், சராசரியாக 50 சதவிகிதம் பேர் வரையறை மற்றும் கருத்துகள் அடிப்படையிலான கேள்விகளுக்கு மட்டும் விடையளிப்பவர்களாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

41 சதவிகிதம் மட்டுமே..

41 சதவிகிதம் மட்டுமே..

வேலைக்கு பொருத்தமான பட்டதாரிகளில் 41 சதவிகிதம் பேர் கணக்கு பதிவியல் வேலைகளுக்கும் 36 சதவிகிதம் பேர் தகவல் தொழில்நுட்ப சேவை வேலைகளுக்கும் தகுதியாக இருப்பதோடு, இவர்கள் அனைவரும் முதல் 30 இடங்களை பிடித்துள்ள கல்லூரிகளுக்கு அப்பாற்பட்ட கல்லூரிகளில் இருந்து வந்தவர்களாகவும் உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

47% graduates of 2013 unemployable for any job: Study

It seems formal education in India is not imparting enough skills to students as nearly half of the graduates of this year were found unemployable for any job, according to a study.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X