சென்னை: இந்தியா முழுவதும் கலக்கிய "அம்மா உணவகம்" தற்போது தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மேலும் சென்னையில் மேலும் சில உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கார்ப்ரேஷன் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் இந்த மலிவு விலை உணவகமான " அம்மா உணவகம்" செயல்பட்டும் வருகிறது. இத்தகைய திட்டத்தின் மூலம் மக்கள் மிகவும் குறைவான விலையில், தரமான உணவை சாப்பிட வழிவகுக்கிறது. மேலும் தின கூலி செய்யும் சாதாரன மக்கள் (நாட்டின் முதுகெலும்பு இவர்கள்) வயிறு நிறைய சாப்பிட்டாலும் 20 ரூபாயிக்கு குறைவாக தான் செலவு ஆகும் என்பது இவர்கள் சொல்லும் செய்தி. (இது வரை எந்த ஒரு மாநில முதலமைச்சரும் இத்தகைய திட்டத்தை அறிவித்து இல்லை.. மற்ற திட்டங்கள் மக்களுக்கு பயனலிலக்கும் வகையில் உள்ளதா என்பது தெரியாது.. ஆனால் இது சூப்பர் திட்டம்.. )
நிதி சுமை
சில தனியார் நிறுவனங்கள் சமுதாய கடமை உணர்ந்து அம்மா உணவகத்திற்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர், இதனால் மாநில அரசுக்கு நிதி சுமை குறையும் என சென்னை கார்ப்ரேஷன் தெரிவித்துள்ளது. (தனியார் நிறுவனங்கள் இதன் மூலம் லாபம் சம்பாதிக்க திட்டமிடுகிறது என்று நினைக்கிறேன்)
2 இலட்சம் மக்கள்
சென்னையில் மட்டும் ஒரு நாளில் சுமார் 2 இலட்சம் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது, மேலும் சென்னையை சேர்ந்நத அம்மா உணவகத்தில் சுமார் 4,000 பெண்கள் பணிபுரிகின்றனர்.
நிதி பற்றாக்குறை
தினமும் அம்மா உணவகத்திற்கு 14 இலட்சம் செலவு செய்யப்படுகிறது, இதில் 9 இலட்சம் மட்டுமே வருமானம் ஆக மொத்தம் 5 இலட்சம் நிதி பற்றாக்குறை. இந்த நிதி பற்றாக்குறை ஒரு வருடத்திற்கு சுமார் 18-20 கோடி வரை இருக்கும் என சென்னை கார்ப்ரேஷன் அலுவலகத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள்
இந்த நிதி பற்றாக்குறையை போக்க சென்னை கார்ப்ரேஷன் திறன் மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்த சில தனியார் நிறுவனங்களை அனுகியது, சமுக நலன் கருதி இந்த நிறுவனங்களுக்கும் ஒப்புக்கொண்டது
1000 கேன்டீன்
மாநில அரசு மேலும் 1000 கேன்டீன்களை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது வரை சென்னையில் மட்டும் சுமார் 203 கடைகள் செயல்பட்டு வருகிறது மற்ற மாவட்டங்களில் சுமார் 90 கடைகள் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவத்தார்.
3 மாநிலங்கள்
இத்தகைய மகத்தான சேவையை அந்திர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலகள் செயல்படுத்த துவங்கிவிட்டது.