டெல்லி: இந்தியாவின் மலிவு விலை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர உள்நாட்டு விமான பயனங்களுக்கு சில குறிப்பிட்ட வரிகள் இல்லாமல் 1 ரூபாயில் அடிப்படையில் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 1 முதல் 3 வரை மட்டும். இந்த டிக்கெட்களின் பயன காலம் 2014 ஆம் ஆண்டின் ஜூலை 1 முதல் 2015ஆம் ஆண்டின் மார்ச் 28 வரை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சேவை குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய தலைமை வர்த்தக அதிகாரியை கேட்ட போது "விடுமுறை நாட்கள் அல்லது வார கடைசி நாட்களை குடும்பமாக அல்லது உங்களுக்கு பிடித்த நன்பர்களுடன் களிக்க சூப்பரான திட்டம் இது" என்று தெரிவித்தார்.
எரிபொருள் வரி
இந்த 1 ரூபாய் டிக்கெட்டிற்கு சில எரிபொருள் வரியும் சலுகையாக்கபட்டுள்ளது. மேலும் இந்த சேவை ஸ்பைஸ்ஜெட்டின் புதிய வழிதடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை சில எண்ணிக்கைகளுக்கு மட்டுமே.
கார்ப்பரேட் பயணிகள்
கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் சென்னை, டெல்லி, ஹைதெராபாத், மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட வழிதடங்களில் அதிகப்படியான கார்ப்பரேட் பயணிகளை கவர்ந்துள்ளதாக ஸ்பைஸ்ஜெட நிறுவனம் தெரிவித்துள்ளது.
சலுகை விலை
இந்தியா முழுவது உள்ள ஸ்பைஸ்ஜெட் வழிதடங்களுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி வரை ரூ.799 முதல் ரூ.1499 வரை சலுகை விலையில் டிக்கெடுகளை விநியோகம் செய்ய உள்ளது.
திட்ட மேம்பாடு
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது முன்பதிவு முறை மற்றும் பணபரிமாற்ற முறையும் மேம்படுத்தியுள்ளது. இதனால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை சமாலிக்க இது உதவும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோ ஏர்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை தொடர்ந்து கோ ஏர் நிறுவனமும் இத்தகைய மலிவு விலை பயன சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.