டெல்லி: இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மக்களுக்கு சாதகமா?? பாதகமா?? என்று பார்த்தால் அது முற்றிலும் பாதகம் நிறைந்த சாதகமான சூழ்நிலையை நமக்கு தருகிறது. இன்றளவில் மிகவும் கடினமான வங்கி பரிமாற்றச் சேவை அனைத்தும் இப்போது எளிமையான முறையில் செயல்பட உள்ளது.
ஆனால் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவத்துள்ளது. இத்தகைய மோசடிகளை தடுக்க என்ன செய்யலாம்??
பாதுகாப்பு அதிகரிப்பு
இத்தகைய நிகழ்வுகளை தடுக்க வங்கிளின் ஆன்லைன் பரிமாற்றச் சேவையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை செயல்படுத்த வேண்டும் என ரிசரவ் வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்
மேலும் வங்கிகள் தங்களின் வாடிக்காயாளர் பயன்படுத்து ஆன்லைன் பரிவர்த்தனையில் இருக்கு இடர்களைப்பற்றி தெளிவான தகவல்களை அளிக்க ரிசர்வ் வங்கி உத்கவிட்டுள்ளது.
இண்டர்நெட் பேங்கிங்
இண்டர்நெட் பேங்கிங் சேவையிலும் இரண்டு அடுக்கு நம்பகத்தன்மைக்கான சூழலை உறுதி செய்ய அனைத்து வங்கிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உன் வாழ்க்கை.. உன் கையில்..
ஆயிரம் தான் வங்கிகள் வங்கி செய்பாட்டை சிறப்பான முறையில் செயல்படுத்தினாலும், நாம் இச்சேவையை பாதுகாப்பாக செயல்படுத்த வேண்டும். அது எப்படி.. (ஆன்லைன் வங்கி சேவையை பாதுகாப்புடன் பயன்படுத்த 10 சிறந்த வழிகள்!! )