நியூயார்க்: ஆன்லைன் பண பரிமாற்ற நிறுவனமான பேபால் நிறுவனத்தில் தனது உயர் அதிகாரியை பற்றி தவறாக ட்வீட் செய்த ஒரு மூத்த அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். டிஸ்மிஸ் செய்யப்பட்ட மூத்த அதிகாரி இந்தியர் என்பது குறிப்பிடதக்கது, இவர் பெயர் ராகேஷ் அகர்வால்.
ராகேஷ் அகர்வால் இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு முக்கிய பிரிவின் இயக்குனராக பேபால் நிறுவனம் இவரை நியமித்தது.
இதுகுறித்து இந்நிறுவனம் தெரிவிக்கையில் "ராகேஷ் தவறான மொழி மற்றும் நடத்தையின் காரணமாக அவரை நிறுவனம் பதவி நீக்கம் செய்து, இனி இவருக்கும் நிறுவனத்திற்கு எந்த விதமான தொடர்பும் இல்லை" என திட்டவட்டமாக டீவிட்டரில் தெரிவித்தது.
பேபால் நிறுவனம்
நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் நிறுவனம் அவர்களுக்கு ஊரிய மரியதயை அளிக்கிறது. மேலும் ராகேஷ்-யை போன்று தவறான நடத்தை உடைய பணியாளர்களுக்கு இந்நிறுவனத்தில் இடமில்லை, மேலும் இதை ஒரு நாளும் பொருத்துக்கொள்ள முடியாது. இதனால இவரை பதிவி நீக்கம் செய்துள்ளம் என பேபால் நிறுவனம் தெரிவித்தது.
ராகேஷ் அகர்வால்
அகர்வால் நியூ ஆர்லின்ஸில் ஜாஸ் விழாவில் இருக்கும் தனது டீவிட்டர் பக்கத்தில் கடுமையான சில பதிவுகளை செய்யதார், மேலும் இது அர்த்தமற்றதாகவும் இருந்தது.
உயர் அதிகாரிகள்
மேலும் அவரின் பதிவுகள் பேபால் நிறுவனத்தின் தொலைதொடர்பு துறையின் துணை தலைவரான கிருஷ்டீனா ஸ்மெட்லி அவர்களை தாக்கியப்படி இருந்தது. இதில் கிருஷ்டீனா ஸ்மெட்லி அவரை "பயனற்ற நடுத்தர நிர்வாகி" என விமர்சித்ததாகவும் அவர் தன் பதிவில் தெரிவித்து இருந்தார்.
பணியாளர்கள் நீக்கம்
அவர் பேபால் நிறுவனத்தில் நிலவு தொடர் பணியாளர்கள் நீக்கத்தை குறித்தும் கருத்து தெரவித்திருந்தார். மேலும் இவர் பேபால் நிறுவனத்தில் இருந்து விளகியதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னனிப்பு
பின்பு சில மணிநேரங்களுக்கு பிறகு அவர் தனது பதிவை டெலிட் செய்துவிட்டார். இது குறித்து அவர் பேபால் நிறுவனத்தின் உயர் அதிகாரியான டேவிட் மார்க்கஸ் தனது மன்னிப்பை தெரிவித்தார். அவர் ரமாண பட ஸ்டைலில் மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தைன்னு சொல்லி அவரை ட்ஸ்மிஸ் செய்தார்.