டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவரிகளின் ஆலோசனைக் குழுவின் தலைவர் திரு.சி.ரங்கராஜன், டெண்டுல்கர் குழு சமர்ப்பித்த இந்தியாவின் வறுமை மதிப்பீடு அறிக்கையை நிராகரித்தார்.
இந்த அறிக்கையில் பல உண்மைகள் வெளிவந்தது, அதில் முக்கியமாக இந்தியா மக்கள் தொகையிவ் 10இல் 3 பேர் ஏழைமையை சந்தித்து வருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது தான் இந்தியாவின் உண்மை நிலை அது தான்.
டெண்டுல்கர்
டெண்டுல்கர் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் 2011-12ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா மக்கள் தொகையில் 29.5 சதவீத மக்கள ஏழ்மையை சந்தித்து வந்ததாக அவர் தெரிவித்தார். சுலபமாக சொல்ல வோண்டும் என்றால் 10 இல் 3 பேர் ஏழ்மையை சந்தித்தனர் என்பது பொருள்.
ரங்கராஜன்
ஆனால் ரங்கராஜன் திட்ட அமைச்சரான ராவ் இந்திரஜித் சிங் அவர்களுக்கு அளித்த அறிக்கையில் 2009-10ஆம் ஆண்டில் 38.2 சதவீத மக்கள் ஏழ்மையை சந்தித்ததாகவும், 2011-12ஆம் ஆண்டில் 29.5 சதவீத மக்கள் வறுமையை சந்தித்ததாகவும் தெரிவித்திருந்தார். அதே காலகட்டத்தில் டெண்டுல்கர் அளித்த அறிக்கையில் 29.8 மற்றும் 21.9 சதவீதம் என்று கணித்திருந்தார். உண்மையிலே அது மிகப்பெரிய வித்தியாசம்.
தனசரி செலவுகள்
இந்த அறிக்கையில் என்ன பிரச்சனை என்றால் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட அளவுகோள்ல் தான் பிரச்சனை. ரங்கராஜன் தினசரி செலவுகளில் ஒரு மனிதன் 47 ரூபாய்க்கு குறைவாக செலவு செய்வது தான் வறுமைக்கான அளவு என்று நிர்னயம் செய்து கொண்டார். ஆனால் டெண்டுல்கர் அவர்களோ 33 ரூபாய் என்று நிர்ணயம் செய்து கொண்டார் இந்த வித்தியாசம் தான் அவர்களின் ஆய்வை புரட்டி போட்டது.
உயர் நீதிமன்றம்
ஆனால் செப்டம்பர் 2011ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெண்டுல்கரின் ஆய்வை நிராகரிப்பு செய்தது.