பிரேசில்: புட்பால் ஆரவாரம் முடிந்த நிலையில் பிரேசிலில் நடக்கும் மிகப்பெரிய பிரிக்ஸ் கூட்டத்திற்காக உலகின் கண்கள் மொத்தமும் பிரேசில் பக்கம் திரும்பியுள்ளது. இந்த கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஆப்ரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா மற்றும் இக்கூட்டமைப்பின் தலைவர் தில்மா ரோஸப் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளஉள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பு, அமைக்கும் புதிய பிரிக்ஸ் டெவலப்மென்ட் பாங்கில் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு நாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் சரி பங்காக முதலீடு செய்ய வேண்டும் என நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
வித்தியாசம் தேவையில்லை
உலகின் மிகப்பெரிய வங்கிகளான சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் இத்தகைய வங்கிகளில் பிற நாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியதுவம் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையை ஒழிக்கும் நிலையில் இந்த வங்கியில் சரி விகிதமாக முதலீடு செய்ய வேண்டும் என்ற கருத்தில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
இரண்டு நாள் கூட்டம்
இந்த இரண்டு நாள் கூட்டத்தில் மோடி பல பிரச்சனைகளையும் முன்னேற்றத்திற்கான வழிகளையும் களைய உள்ளார் இதில் முக்கியமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நிதி கட்டமைப்பு ஆகியவை இடம் பெறுகிறது.
பிரிக்ஸ்
இந்த கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து புதிய வங்கி ஒன்றை அமைக்க உள்ளது.
பிரிக்ஸ் டெவலப்மென்ட் வங்கி
இந்த வங்கிக்கான இந்தியாவின் ஒப்புதலை கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் இந்த அமைப்பு பெற்றது, துவக்க முதலீட்டாக இதில் 50 பில்லியன் டாலர் கொண்டு துவக்கப்படும் எனவும் பின்னாலில் பிற நாடுகள் இணையும் போது இது 100 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.