டெல்லி: 2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வருகிற ஜூலை 31ஆம் தேதி தான் கடைசி என்ற நிலையில் இந்தியாவின் அனைத்து வருமான வரி துறை அலுவலகங்களுக்கும் அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பகுதி நேரமாக செயல்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் தங்கல வருமான வரி தாக்கல் விண்ணப்பத்தை விடுமுறை நாட்களிலும் சமர்ப்பிக்க முடியும். மேலும் வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிக்கப்படுமா என்பது சந்தேகமே.
எனவே அடுத்தும் 5 நாட்களில் பான் கார்ட் வைத்திருக்கும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் இது தேசிய குற்றமாக கருதப்படும். உங்கள் வருமான வரித் தட்டுக்குள் இல்லை என்றால் பான வைத்திருக்கும் ஒவ்வொருவறும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
மக்கள் வருமான வரி எளிதாகவும் விரைவாகவும் தாக்கல் செய்ய அனைத்து வருமான வரி துறை அலுவலகங்களிடத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூலா 26 முதல் 28 மற்றும் ஜூலை 30 முதல் 31 வரை ஆகிய நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் செயல்படும் வகையில் அறிவுத்தப்பட்டுள்ளது.