டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி (DA) உயர்விற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு நிறுவனங்களில் பணியுரியும் 30 லட்ச பணியாளர்கள் மற்றும் 50 லட்ச ஒய்வூதியம் பெறுபவர்கள் நன்மை அடைவர்.
இந்த உயர்வின் மூலம், பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தல் அகவிலைப்படி சுமார் 107 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்றில் 7 சதவீத அகவிலைப்படி உயர்விற்கு ஒப்புதலை வழங்கியது, மேலும் இந்த உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரவிக்கப்பட்டது.
மத்திய அரசு, 6 மத்திய சம்பளம் ஆணையத்தின் பரிந்துறைப்படி 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியதால் கருவூலத்தில் அகவிலைப்படிக்காக 7,691 கோடி ரூபாயும், அகவிலை நிவாரணத்திற்காக 5,127 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.