வங்கி பியூனாக இருந்து ரூ.7 கோடி சொத்து சேர்த்த குல்தீப்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குவாலியர்: வங்கியில் 30 வருடமாக பதவி உயர்வு ஏதுமில்லாமல் பியூனாக மட்டும் பணியாற்றி சுமார் 7 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளார் ஒருவர். மத்திய பிரதேசத்தில் உள்ள மாநில அரசின் ஒரு கூட்டுறவு வங்கியில் 30 வருடமாக பணியாற்றி வரும் குல்தீப் யாதவ் நூதன முறையில் சொத்துகளை சேர்த்துள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஒருவர் மொட்டை கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தை வைத்து வருவாய் துறை அதிகாரிகள் குல்தீப் வீட்டை சோதனையிட்டபோது, அவருக்கு ஆறு பங்களாக்கள், இரண்டு சொகுசு கார்கள், ஏராளமான நகைகள் சொந்தமாக இருப்பது தெரிய வந்ததுள்ளது.

நாள் முழுவதும் சோதனை

நாள் முழுவதும் சோதனை

வருவாய் துறை அதிகாரிகள் செவ்வாய் கிழமை முழுக்க குல்தீப் வீட்டில் சோதனை நடத்தினர். இச்சோதனையில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அதிகாரிகள் கைபற்றினர். 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு வங்கி பியூன் எப்படி 7 கோடி ரூபாய் வரை சொத்து சேர்க்க முடியும் என அதிர்ந்து போயினர்

சொத்து விபரங்கள்

சொத்து விபரங்கள்

சோதனையில் வருவாய் துறையினருக்கு இரண்டு அடுக்கு வீடு, 5 பெரிய வீடுகளுக்கான பத்திரங்கள், 2 செகுசு கார்கள், பணம், கிலோ கணக்கில் நகைகள், 4 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டங்கள், நிலம் மற்றும் வங்கி லாக்கருக்கான ஆவணங்கள் கைபற்றியுள்ளது.

மதிப்பீடு
 

மதிப்பீடு

குல்தீப் யாதவ் சம்பளத்தை ஒப்பிடும் போது இவரது சொத்து மதிப்பு சுமார் 200 சதவீதம் அதிகமானது என இச்சோதனையில் ஈடுப்பட்ட சுரேந்திரா ராய் ஷர்மா தெரிவித்தார். (ஐடியிலும், உற்பத்தி துறையிலும் ராத்திரி பகல் என்று பார்க்காமல் உழைக்கும் பலருக்கு மாத கடைசியில் நாக்கு தள்ளுகிறது... இவர் அழகாக 7 கோடி சம்பாதித்து விட்டார்... பலே குல்தீப் பலே..)

வருவாய் துறையினரின் கணக்கு

வருவாய் துறையினரின் கணக்கு

மாநில அரசு கூட்டுறவு வங்கியில் 30 வருடமாக பணியாற்றி வரும் குல்தீப் யாதவிற்கு 20,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் இருக்காது. ஆகையால் இத்தனை வருடத்தில் 20 லட்சத்திற்கு மேல் இவரால் சொத்துகளை சேர்ந்து இருக்க முடியாது என வருவாய் துறை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

வழக்கு

வழக்கு

இதையடுத்து, அவர் சட்டத்திற்கு புறப்பாக செயல்களில் ஈடுப்பட்டும், லஞ்சம் வாங்கியதாகவும் குல்தீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A Peon for 30 Years, He has Six Houses, Two Luxury Cars and More

For 30 years, Kuldeep Yadav has been a peon at a bank in Madhya Pradesh. This morning, raids at three of his six homes in Gwalior revealed assets worth Rs. three crore and counting.
Story first published: Friday, September 5, 2014, 11:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X