டெல்லி: இந்தியாவில் பல பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் தற்போது தொழிற்நுட்ப முன்னேற்றத்தாலும், உற்பத்தி தேவை குறைந்ததாலும் செயல்படாமல் உள்ளது. இதனால் மத்திய அரசிற்கு மிகப்பெரிய பொருளாதாரட பரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் செலவுகளை குறைக்கவும் வருவாய் பெருக்கவும் மத்திய அரசு செயல்படாமல் இருக்கும் சுமார் 10 நிறுவனங்களை அடுத்த சில மாதங்களில் மூட முடிவு செய்துள்ளது.
சொத்து மதிப்பு
வருவாய் அளிக்காமல் செலவுகளை மட்டும் தரும் 10 நிறுவனங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இந்த 10 நிறுவனங்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 24,500 கோடி ரூபாய். இந்நிலையில் இத்தகைய நிறுவனங்களை மூடிவிட்டு சொத்துகளை விற்கவும், குத்தகைக்கு விடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தகவல் அளிக்க மறுக்கும் மத்திய அரசு
மத்திய அரசு பட்டியலிட்டுள்ள 10 நிறுவனங்களை பற்றி தகவல் அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் சில பெயர் வெளியிட விரும்பாத சில அரசு ஊழியர்கள் நிறுவன பெயர்களை வெளியிட்டுள்ளனர்.
10 நிறுவனங்கள்
பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல், ஏர் இந்தியா, ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், ஹிந்துஸ்தான் பெர்டிலைசர்ஸ், ஹெச்.எம்.டி ஆகிய 7 பொதுத்துறை நிறுவனங்களின் பெயரை இந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெச்.எம்.டி
1967ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவன துணையுடன் துவங்கி இந்நிறுவனம் தற்போது செயற்படாமல் முடங்கியுள்ளது. இந்நிறுவனத்தை மூட அரசு தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
தொலைதொடர்பு நிறுவனங்கள்
மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்கள் பல காலாண்டுகளாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களையும் இணைத்து செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஏர் இந்தியா
இந்தியாவில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்கள் களம் இறங்கியதால் போட்டி அதிகரித்தது. இதில் அரசு நிறுவனமான ஏர் இந்தியா தாக்கு பிடிக்க முடியாமல் திணறிவருகிறது, இந்நிலையில் இந்நிறுவனம் வருமானத்தை பெருக்க ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்
தமிழ்நாட்டின் பழமையான நிறுவனங்களில் ஒன்று ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், இந்நிறுவனம் ஊட்டியில் அமைந்துள்ளது. தொழிற்நுட்ப முன்னேற்றத்தால் போட்டோ பிலிம்ஸ் பயன்பாடு குறைந்தது, இதனால் இந்நிறுவனத்தில் உற்பத்தி முற்றிலும் குறைந்தது. ஹெச்.எம்.டி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மத்திய அரசு குறிவைக்கும் நிறுவனம் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்.