டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை அமெரிக்காவிற்கு 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவை விட்டு புறப்பட்ட சென்றார் . இப்பயணத்தில் முதல் நாளான இன்று இந்திய கடற்படையை கண்காணிக்க உதவும் 16 சிக்கோர்க்ஸ்கி விமான கடல் ரோந்து ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். இதன் மதிப்பு 1 பில்லியன் டாலர் ஆகும்.
மேலும் ஒபாமா அரசு கடற்படை ரோந்து ஹெலிகாப்டர்கள் மட்டும் அல்லாமல் பிரங்கி மற்றும் டாங்குகளும் வாங்க வலியுறுத்தி வருவாதாக செய்தி கிடைத்துள்ளது.
60,000 கோடி ரூபாய்
அமெரிக்காவிடம் இருந்து அதிகளவிலான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும் கடந்த 10 வருடத்தில் சுமாஹர் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கவிடம் இருந்தி இந்தியா வாங்கியுள்ளது.
போர் ஹெலிகாப்டர்
இதில் ஆயுதம் மற்றும் கனரக பொருட்களை ஏந்திச் செல்லும் C-17 ஹெலிகாப்டர்கள், விமான தாக்குதலை மேற்கொள்ள பயணபடுத்தும் C-130J ஹெர்குலஸ் ஹெலிகாப்டர், மற்றும் நீர்முழ்கி கப்பல்களில் இருந்து தாக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகனைகள் மற்றும் அணு ஆயுதங்களை கண்டறியும் அதி நவின ரேடார் கருவிகளும் இந்த பத்து வருடங்களில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
வெறும் 30 சதவீதம்!!
இவ்வளவு ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இந்தியா வைத்திருந்தாலும் சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளை ஒப்பிடும் போது இது வெறும் 30 சதவீதம் தான். இதனை அதிகரிக்கவே பாதுகாப்புத் துறையில் அதிகப்பிடான அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்தது.
பாதுகாப்பு துறை
சரி அன்னிய முதலீட்டுக்கு ஓகே சொல்லியாச்சே அப்புறம் எதுக்கு இந்த புதிய டீல் என்றால், தற்போது கிடைக்கு முதலீட்டை வைத்துதான் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கு முடியும் பின்பு தான் அதில் இருந்து ஆயதங்கள் பெற முடியும்.
10-15 வருடங்கள்
இந்திய நாட்டில் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை நாம் பயன்படுத்த இன்னும் 10 முதல் 15 வருடங்கள் வரை ஆகும். இந்த இடைப்பட்ட காலங்களில் நம்மை பாதுகாத்துக்கொள்ள தான் இந்த புதிய டீல்.