சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகளுக்காக அதிகவேக இண்டர்நெட் இணைப்பு கொண்ட வை-பை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் இணையத்தை பயன்படுத்தலாம்.
மேலும் நாட்டில் எந்த ஒரு ரயில் நிலையத்திலும் இத்தகைய சேவை இல்லை என்பது குறிப்பிடதக்கது.
சதானந்த கவுடா
இத்திட்டத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சாரான சதானந்த கவுடா வெள்ளிக்கிழமை சென்னையில் துவங்கி வைத்தார். அடுத்த சில தினங்களில் பயணிகள் ரயில் நிலையத்தில் இணையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில் நிலைய நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் சென்னை இராயபுரம் ரயில் நிலையத்தையும் பார்வையிட்டார்.
இண்டர்நெட் இணைப்பு
சென்னையில் ரயில் நிலையத்தில் அமைக்கப்படுவது 512kbps வேகம் கொண்டு இண்டர்நெட் இணைப்பு. இது ரயில் நிலையத்திற்கு 60 மீட்டர் தொலைவு வரை இணைப்பு கிடைக்கும். மேலும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு 60 இலட்சம்.
பாஸ்வேர்டு
இச்சேவையை பயன்படுத்துவதற்கு பணிகள் ரயில் நிலைய தளத்திற்கு சென்று ஒன்-டைம் பாஸ்வேர்டு பெற வேண்டும். அதன் மூலம் இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
கட்டணம்
இப்பயன்பாட்டில் முதல் 30 நிமிடங்கள் மட்டுமே இலவசம். பின்பு இணையத்தை பயன்படுத்த எலக்ட்ரானிக் முறையில் பணம் செல்லுத்த வேண்டும். மேலும் தகவல்களை பதிவிற்கும் செய்ய எந்த கட்டுப்பாடும் இல்லை, பதிவேற்றம் செய்வதில் தான் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இராயபுரம் ரயில் நிலையம்
மேலும் இராயபுரம் ரயில் நிலையத்தை பார்வையிட்ட சதானந்த கவுடா, ரயில் நிலையம் மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.