டெல்லி: எழை மக்களுக்கும் மிகவும் பயன்படும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மாநில அரசு வழங்கி வருகிறது, தற்போது உள்ள நிலையில் எழை மக்கள் மட்டும் அல்லாமல் ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இனி இத்திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர், அரசு உயர் அதிகாரிகளுக்களை நீக்க மத்திய அரசு முனைப்புடந் செயல்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் இதே போன்ற நடைமுறை தான் செயல்பட்டு வருகிறது. அங்கு குரூப் 1, குரூப் 2 நிலையிலான அரசு அதிகாரிகள், வருமானவரி செலுத்துவோருக்கு பொது விநி யோகத் திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ராம்விலாஸ் பாஸ் வான்
இப்புதிய முடிவுகளை குறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில் மத்திய பிரதேசத்தை போலவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்து வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார்.
உணவுத் துறை அமைச்சகம்
இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுடனும் உணவுத் துறை அமைச்சகம் பேச்சு வார்த்தை நடத்திய வருகிறது.இதன் மூலம் இத்திட்டத்த விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பாஸ்வான் தெரிவித்தார்.
உணவுச் சட்டத்தின்
மேலும் உணவுச் சட்டத்தில் பாதகமான அம்சங்களை திருத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தாத மாநில அரசு விரைவாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார், உணவுச் சட்டம் அமல்படுத்தப்படும் வரை பழைய பொது விநியோகத் திட்ட முறை தொடரும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.