டெல்லி: இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலை பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு விற்பனை வரியை சுமார் 70 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில் மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கு விதமாக இனி வரும் சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் சுகாதார எச்சரிக்கைகள் அளிக்கும் வகையில் பெரிய மற்றும் புதிய படங்களை பதிக்க மத்திய அரசு, தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இதை ஏப்ரல் 1, 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிகரெட் மற்றும் புகையிலை தயாரிப்பு நிறுவனகள், தங்களின் தயாரிப்புகளில் குறைந்தது 85 சதவீத பாக்கெட்டுகளில் சுகாதார மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட விளம்பரங்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.
மேலும் இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவதன் மூலம் புற்று நோய் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது பெண்களும் அதிகளவில் புகை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தமான செய்தி.