ராஜஸ்தான்: இந்தியாவில் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது தயாரிப்பின் அளவை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சிகளிளும் சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
திங்கட்கிழமை ராஜஸ்தான், நீம்ரானா பகுதியில் 1,050 கோடி ரூபாய் மதிப்பில் உருவான தொழிற்சாலையில் உற்பத்திய துவங்கியது, 2020ஆம் ஆண்டுக்குள் இத்தொழிற்சாலையின் உற்பத்தி அளவை 100 மில்லியனாக உயர்த்திட திட்டமிடப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த 5000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் குஜராத் மற்றும் அந்திர பிரதேசம் மற்றும் உலகளவில் கம்போடியா மற்றும் பங்களாதேஷ் பகுதியில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதேபோல் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பிற்காக தனியொரு கூடத்தை ராஜஸ்தான் பகுதியில் குக்காஸ் பகுதியில் அமைக்க உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் தெரிவித்தார்.
மேலும் நிறுவனம் உலகின் பல சந்தைகளில் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையில் தடைகள் இருக்க கூடாது என்ற காரணத்தினால் உற்பத்தியை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.