உற்பத்தியை அதிகரிக்க ரூ.5,000 கோடி முதலீடு!! ஹீரோ மோட்டோகார்ப்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜஸ்தான்: இந்தியாவில் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது தயாரிப்பின் அளவை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சிகளிளும் சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிக்க ரூ.5,000 கோடி முதலீடு!! ஹீரோ மோட்டோகார்ப்

திங்கட்கிழமை ராஜஸ்தான், நீம்ரானா பகுதியில் 1,050 கோடி ரூபாய் மதிப்பில் உருவான தொழிற்சாலையில் உற்பத்திய துவங்கியது, 2020ஆம் ஆண்டுக்குள் இத்தொழிற்சாலையின் உற்பத்தி அளவை 100 மில்லியனாக உயர்த்திட திட்டமிடப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த 5000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் குஜராத் மற்றும் அந்திர பிரதேசம் மற்றும் உலகளவில் கம்போடியா மற்றும் பங்களாதேஷ் பகுதியில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதேபோல் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பிற்காக தனியொரு கூடத்தை ராஜஸ்தான் பகுதியில் குக்காஸ் பகுதியில் அமைக்க உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் தெரிவித்தார்.

மேலும் நிறுவனம் உலகின் பல சந்தைகளில் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையில் தடைகள் இருக்க கூடாது என்ற காரணத்தினால் உற்பத்தியை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hero MotoCorp to invest Rs. 5,000 crore to raise global production capacity

The country's biggest two-wheeler maker Hero MotoCorp's on Monday said it has earmarked an investment of Rs. 5,000 crore to build new manufacturing plants, including outside of India, and an R&D centre within the next three years.
Story first published: Monday, October 20, 2014, 18:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X