டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய இரு வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாரப் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை 8.75 சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் 575,056 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது குறிப்பிடதக்கது.
கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் இந்நிறுவனம் 625,420 வாகனங்களை விற்றது குறிப்பிடதக்கது. மேலும் இந்த விழாகலத்தில் மட்டும் சுமார் 10 இலட்சம் இரு சக்கர வாகனங்கள் இந்நிறுவனம் விற்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம்
செப்டம்பர் 25ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 தேதி வரையிலான காலகட்டங்களில் (37 நாட்கள்) இந்நிறுவனம் 10 இலட்சம் வாகனங்களை விற்றுள்ளது குறிப்பிடதக்கது.
புது வரவு
இந்நிறுவனத்தின் புது வரவான ZMR, ஸ்பெலன்டர் ஐஸ்மார்ட், ஸ்பெலன்டர் ஃபுரோ கிளாசிக் மற்றும் பேஷன் ஆகிய வாகனங்களின் விற்பனை சிறப்பாக இருந்ததாவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான்
மேலும் அக்டோபர் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ராஜஸ்தானில் நீம்ரானா பகுதியில் புதிய தொழிற்சாலையில் தனது உற்பத்தியை துவங்கியது.
ரூ.5,000 கோடி மூதலீடு
இந்நிறுவனம் கொலம்பியா மற்றும் பங்களாதேஷ் பகுதியில் புதிய தொழிற்சாலையை துவங்க 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதிய தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.