அக்டோபரில் உள்நாட்டு விமான சேவை 18% அதிகரிப்பு!

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் உள்நாட்டு விமான சேவை கடந்த அக்டோபர் மாதத்தில் 18% அளவுக்கு அதிகரித்துள்ளது. இதில் இண்டிகோ நிறுவனம் முதலிடத்திலும் ஏர் இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது.

உள்நாட்டு விமான சேவைகள் மூலம் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்தம் 50.08 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் இது 59.25 லட்சமாக அதிகரித்துள்ளது.

அக்டோபரில் உள்நாட்டு விமான சேவை 18% அதிகரிப்பு!

விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இண்டிகோ விமான நிறுவனம் மூலம் 18.90 லட்சம் பேரும் ஏர் இந்தியா மூலமாக 11.56 லட்சம் பேரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்த்தின் மூலமாக 10.27 லட்சம் பேரும் பயணித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மூலமாக 9.73 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.

மிகக் குறைந்த அளவாக ஏர் ஏசியா நிறுவனத்தின் மூலம் 66 ஆயிரம்பேர்தான் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஜனவரி முதல் அக்டோபர் வரையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உள்நாட்டு விமான சேவையானது 8.61% அதிகரித்துள்ளது.

மேலும் அக்டோபர் மாதத்தில் சேவைகள் ரத்து உள்ளிட்ட பல காரணங்களுக்காக சுமார் ரூ1.5 கோடி அளவுக்கு பயணிகளுக்கு இந்திய விமான நிறுவனங்கள் பணத்தை செலுத்தியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Domestic air traffic grew in October

Domestic air traffic grew by over 18 per cent last month compared to October last year.
Story first published: Tuesday, November 18, 2014, 15:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X