மீண்டும் நடைமுறைக்கு வந்தது கிசான் விகாஸ் பத்திர திட்டம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய தபால் துறையில் பல முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அதில் மிகவும் பிரபலமான திட்டம் என்றால் கிஸான் விகாஸ் பத்திர திட்டம் தான். ஆனால் முன்று வருடங்களுக்கு முன்பு சில முக்கிய காரணங்களுக்காக இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

இதனால் பல சர்ச்சைகள் உருவானது, எனவே இன்று இத்திட்டம் மீண்டும் உயிர்பெற்று நடைமுறைக்கு வந்துள்ளது.

கிசான் விகாஸ் பத்திர திட்டம்

கிசான் விகாஸ் பத்திர திட்டம்

தபால் துறையில் இருக்கும் பிபிஎஃப், என்.எஸ்.சி திட்டங்கள் போலவே கிசான் விகாஸ் பத்திர திட்டத்திலும் பல நன்மைகளும் மற்றும் சில இடர்களும் உள்ளது. பொதுவாக சிறு முதலீட்டாளர்கள் இத்திட்டத்தை வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிடுவார்கள் எனவே சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான திட்டமாக கிசான் விகாஸ் பத்திர திட்டம் உள்ளது.

வட்டி வகிதம்

வட்டி வகிதம்

இத்திட்டம் மக்களுக்கு 1,000 ரூபாய் குறைந்தபட்ச முதலீடாக கொண்டு 5000 ரூபாய், 10,000 ரூபாய் என்ற வீதத்தில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. இத்திட்ட முதலீட்டில் வருடத்திற்கு 8.7 சதவீத வட்டியை அளிக்கிறது.

100 மாதம்
 

100 மாதம்

மேலும் இத்திட்டத்தில் 100 மாதத்தில் ஆதாவது 8 வருடம் 4 மாதத்தில் உங்கள் முதலீட்டு 2 மடங்காக உயரும்.

பகுதி முதலீட்டுத் தொகை

பகுதி முதலீட்டுத் தொகை

இத்திட்டத்தில் செய்த முதலீட்டை, திட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எடுக்க வேண்டும் என்றால் 2 வருடம் 6 மாதங்கள் பொருத்திருக்க வேண்டும்.

விரி விலக்கு

விரி விலக்கு

தபால் நிலையத்தில் வழங்கும் பிற திட்டங்களை போலவே இந்நிறுவனம் இத்திட்டத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் இத்திட்டத்தை வைத்துக்கொண்டு கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

வங்கி வைப்பு நிதிகள்

வங்கி வைப்பு நிதிகள்

இத்திட்டத்தை வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிட்டால் லாப விகிதத்தில் சற்று குறைவானதே. வங்கிகளில் வைப்பு நிதி திட்டத்திற்கு 3 வருடத்திற்கு 9 சதவீத வட்டியை வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kisan Vikas Patra: a re-launch with very few justifications

Despite some criticism and misgivings in certain quarters, the government has decided to re-introduce the Kisan Vikas Patra (KVP), a savings instrument that was discontinued three years ago.
Story first published: Monday, December 1, 2014, 14:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X