மும்பை: இன்றைய நடைமுறையில் வர்த்தகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கு இடையேயான துறை தான் இ-காமர்ஸ். மேலும் இத்துறை இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக இத்துறையின் முன்னணி நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் மற்றும் மின்திரா நிறுவனங்களின் மீது பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை களைய புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனங்களின் செயல்பாடுகள் கவலை அளிப்பதாக உள்ளது என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஹெச்ஆர்.கான் தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகள்
மேலும் இத்துறைக்கு விரைவில் வழிகாட்டு விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்றும், இ-காமர்ஸ் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் மிகவும் கவலை அளிக்கும் விதிமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய சக்தி
இ-கமார்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது, இதை கண்டிப்பாக புறக்கணிக்க முடியாது. மேலும் இத்துறையின் செயல்பாட்டை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். விரைவில் இவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிடும் என கான் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
இது தொடர்பாக ஆர்பிஐ மூத்த அதிகாரிகளிடத்தில் மத்திய தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார் என்றும், தொழில்துறை அமைச்சகமும் இதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கான் கூறினார்.
கொள்முதல் மற்றும் தள்ளுபடி
இ-காமர்ஸ் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் தள்ளுபடி முறைகள் குறித்த இந்த வழிகாட்டுதல்கள் குறித்து ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
இ-காமர்ஸ் நிறுவனங்களால் சிறு மற்றும் குறு தொழில்களின் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. என்றும் குறிப்பிட்டார்.