மும்பை: நரேந்திர மோடி தலைமையில் குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் 7வது வைபரன்ட் குஜராத் பிஸ்னஸ் சுமிட் கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் இந்தியாவின் உள்ள பல தொழில்அதிபர்கள் 100,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட உள்ளதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், புதிய நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் குஜராத்தில் புதிய சர்வதேச பங்குச் சந்தையை அமைக்க மும்பை பங்குச் சந்தை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான நன்மை கிடைக்கும்.
ஒப்பந்தம்
இதற்கான ஒப்பந்தம் கூட்டத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை கையெழுத்தானது என்று மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் சவுகான் தெரிவித்தார்.
சர்வதேச பங்குச் சந்தை
இப்புதிய சர்வதேச பங்குச் சந்தையில் (International Exchange) மின்னணு முறையில் நிறுவன பங்கு வர்த்தகம், பத்திர விற்றல் மற்றும் வாங்குதல், வட்டி வகிதம் அளித்தல், பண பரிமாற்றம் மற்றும் நாணய சந்தை, மற்றும் பிற சொத்து பரிமாற்றங்களும் செய்துகொள்ளும் வகையில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
குஜராத்தின் கிப்ட்
மேலும் இப்பதிய சந்தை குஜராத்தின் ஸ்மார்ட் சிட்டி GIFT-SEZ பகுதியில் அமைய உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர குஜராத் மாநிலம் சுமார் 100,000 கோடி ரூபாய் செலவில் ஒரு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இதை பற்றி தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்.
150 கோடி ரூபாய் முதலீடு
இந்தப் புதிய சர்வதேச பங்கு சந்தையை மும்பை பங்குச் சந்தையும் அதன் துணை அமைப்புகளும் இணைந்து ரூ. 150 கோடி முதலீட்டில் அமைக்கும். பன்னாட்டு நிறுவனங்கள், பிற வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனம் திரட்டுவதற்கு, இந்தப் புதிய சந்தை உதவும்.
முதல் சர்வதேச நிதியியல் அமைப்பு
மேலும் கிப்ட் சிட்டியின் வெளியிட்டின் படி இந்தியாவின் முதல் சர்வதேச நிதியியல் அமைப்பு இந்திய அரசால் கிப்ட் சிட்டியில் அமைக்கப்படுகிறது என அறிவித்ததுள்ளது. மேலும் இத்தகைய அமைப்ப இல்லாத காரணத்தினால் இந்தியா 50 சதவீத சந்தையை இழந்துள்ளது என மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது.